Thursday, November 28, 2019

மீளாத சூழலில்...

மீளாத சூழலில்....
****************************************************
எதற்காக இவர்கள் இப்படி
வீணாய் விவாதிக்கிறார்கள் ?
நெறியாளர் என்றே நாளும் 
நடுத்தெரு சண்டையை நடத்துகிறார்கள் !
நிகழ்வுகளின் அலசல்தான்
யார் இல்லையென்றது ?
ஏதொரு முடிவுமின்றி நேரம்கடத்தி
தலைகால் புரியாமல் அந்தரத்தில்
நம்மைத் தொங்கவிட்டுச் செல்கிறார்கள் !
நாளுக்கொரு தலைப்பில்
நாட்டு நடப்பை பிரித்து மேய்ந்தாலும்
அர்த்தமுள்ள அணுகுமுறை
அரிதாகத்தான் இருக்கிறது !
நல்லதையும் தீயதையும்
திசைதிருப்பும் நாடகம்தான் நடக்கிறது !
நடப்பது நடந்துகொண்டுதான்
நாட்களை நகர்த்துகிறது ....!
நினைத்துப்பார்க்கிறேன் ....
அந்நாளைய திண்ணைப் பேச்சுகள்கூட
தீர்வுக்குத் துணையாய் இருந்தன !
ஆனால் இன்றோ திண்ணையை மறந்து
தேடி அலைகிறோம் ...................
மனிதநேய உரையாடலின் வாசம் நுகர !
.............கா.ந.கல்யாணசுந்தரம்

1 comment:

கா.ந.கல்யாணசுந்தரம் said...

பின்னூட்டமிட அன்போடு அழைக்கிறேன்.