Thursday, December 5, 2019

ஹைக்கூ கவிதைகள்

* பூட்டப்படாத
இரட்டை மாட்டு வண்டி
ஓய்வெடுக்கும் காளைகள்
* கிணற்றோடு 
மாறாத வடுக்கள்
ஏத்தம் இயக்கிய தடங்கள்
* அறுவடை நாட்களை
நினைவு கூறுகின்றன
அருவாவும் களத்துமேடும்
* பூமிக்குப் பாரமாய்
சாய்ந்து கிடக்கிறது
சாலையோர சுமைதாங்கி
* அம்மன் கோயில் கிழக்காலே
அன்னவயல் மேற்காலே
கைப்பேசி கோபுரம் நடுவாலே
* பாரம்பரிய தெருக்கூத்தை
விழுங்கி ஏப்பமிட்டன
ஆடல் பாடல் நிகழ்வுகள்
.......கா.ந.கல்யாணசுந்தரம்

No comments: