Monday, November 4, 2019

எங்கும் தமிழே முழங்கக் கேட்போம் 
எதிலும் தமிழே வழங்கக் கேட்போம் 
பொங்கும் தமிழின் இலக்கியச் சுவையை 
பூமியின் மீது உலவ விடுவோம் 
கங்கை தவழும் இமயம் கடந்து 
கன்னித்தமிழைக் கொண்டு செல்வோம் 
திங்கள் செல்லும் விண்வெளிப் பாதையில் 
மங்காத தமிழொளி சிந்திடக் காண்போம் 

.......கா.ந.கல்யாணசுந்தரம் 

No comments: