எங்கும் தமிழே முழங்கக் கேட்போம்
எதிலும் தமிழே வழங்கக் கேட்போம்
பொங்கும் தமிழின் இலக்கியச் சுவையை
பூமியின் மீது உலவ விடுவோம்
கங்கை தவழும் இமயம் கடந்து
கன்னித்தமிழைக் கொண்டு செல்வோம்
திங்கள் செல்லும் விண்வெளிப் பாதையில்
மங்காத தமிழொளி சிந்திடக் காண்போம்
.......கா.ந.கல்யாணசுந்தரம்
No comments:
Post a Comment