Tuesday, July 5, 2022

சொல்லாமல் சொல்லிவிடு


 

ஒரு பாடல் எழுதிப் பார்க்கிறேன்…
பாடுவோர் பாடலாம்…
+++++++++++++++++++++++++++++++++++++++++
சொல்லாமல் சொல்லிவிடு
நெஞ்சோடு பதியமிடு
பொன்னேட்டில் எழுதிவிடு
பூப்போலே சிரித்துவிடு
பெண்ணே…...நீ ...நடக்கும் பாதையிலே
வெண்பஞ்சைத் தூவட்டுமா ? - ஒரு
வெண்பாவைப் பாடட்டுமா ?
…………...சொல்லாமல் சொல்லிவிடு
நெஞ்சோடு பதியமிடு
பொன்னேட்டில் எழுதிவிடு
பூப்போலே சிரித்துவிடு
கவியெழுதி வார்த்தைகளை
அசைபிரித்துச் சொல்லட்டுமா
அணியணியாய் இலக்கணத்தை
அள்ளிவந்து கொட்டட்டுமா ?
பெண்ணே…...நீ ...நடக்கும் பாதையிலே
வெண்பஞ்சைத் தூவட்டுமா ? - ஒரு
வெண்பாவைப் பாடட்டுமா ?
…………...சொல்லாமல் சொல்லிவிடு
நெஞ்சோடு பதியமிடு
பொன்னேட்டில் எழுதிவிடு
பூப்போலே சிரித்துவிடு
உவமைக்குப் பொருளாகி
உலாவரும் பேரழகே !
வஞ்சப்புகழ்ச்சியென எண்ணாதே
கொஞ்சியெனைக் கொல்லாதே !
பெண்ணே…...நீ ...நடக்கும் பாதையிலே
வெண்பஞ்சைத் தூவட்டுமா ? - ஒரு
வெண்பாவைப் பாடட்டுமா ?
…………….சொல்லாமல் சொல்லிவிடு
நெஞ்சோடு பதியமிடு
பொன்னேட்டில் எழுதிவிடு
பூப்போலே சிரித்துவிடு
பெண்ணே…...நீ ...நடக்கும் பாதையிலே
வெண்பஞ்சைத் தூவட்டுமா ? - ஒரு
வெண்பாவைப் பாடட்டுமா ?
…………….கா.ந.கல்யாணசுந்தரம்

No comments: