Tuesday, July 5, 2022

பயணிக்கும் அற்புதம் நீ!

 சிந்தை முழுதும் என்னோடு

பயணிக்கும் அற்புதம் நீ!
***************************************
தோளில் அமர
உலகைக் காட்டினாய்
மார்பில் உதைத்த போதும்
விரல் பிடித்து எழுதிய
நாட்களில் உனது
வழிகாட்டால் விசாலமானது
பள்ளிக்கூடத்து வாயிலில்
தினமும் உனது வருகைப் பதிவு
வகுப்பறைக்குள் நான்
முதல் மாத ஊதியம்
ஆவலுடன் கொடுத்தேன்
தொடரும் உன் ஆசிகள்
எனது துணையுடன்
மணவரை சுற்றிவர உனது
உழைப்பே முன் சென்றது
இறுதிச் சுவாசம் வரை
தன் கையே தனக்குதவி
என வாழ்வில் உயர்ந்தவரே!
தந்தையே வணங்குகிறேன்
சிந்தை முழுதும் என்னோடு
பயணிக்கும் அற்புதம் நீ!
..... கா. ந. கல்யாணசுந்தரம்

No comments: