Thursday, November 11, 2021

பெண்ணியச் சிந்தனையின் உச்சம்

 


பெண்ணியச் சிந்தனையின் உச்சம்

*************************************************
உயிர்ப்புடைய சிந்தனைக்குள்
உண்மைகள் உறைந்துகிடக்க
ஒரு வலைப்பின்னலைப்போல்...
பெண் எனும் மாயை என்னைச்சுற்றியே
கூடாரம் போட்டுத் தவிக்கவிடுகிறது !
ஒடுக்கும் குரலுக்குள் அதிகார ஆண்மை
மிடுக்கு எனும் வேடதாரியாய்
ஓநாய்போல் எனது உரிமைக்குள்
ஓலமிட்டு அடக்கியாள்கிறது...
ஒவ்வாமல் சிக்கித் தவிக்கிறேன் !
இன்னும் திருந்தியபாடில்லை சமூகம்...
அகம் புறம் எனும் ஒழுக்க அணிகலன்களை
கூறு போட்டுக் களைந்தெறிந்து ...
கொக்கரிக்கும் கூட்டம் இன்னமும்
குதூகலமாய் கும்மாளமிடுகிறது !
கூரான எனது விரல் நகங்கள்
எனது மார்பினைக் கிழிக்கத் துடிக்கிறது !
அடைபட்டு என்னிதயக் கூட்டில்
அபயக் குரலெழுப்பி துவளும் பறவைகளை...
சுதந்திரமாய் பறக்கவிடுவேன் என்றேனும் !
……...கா. ந. கல்யாணசுந்தரம்

No comments: