Friday, November 12, 2021

தவறவிட்ட நாட்களின் மணித்துளிகள்

கனவில் பூத்த காகிதக் காளான்களுக்கு குடைபிடித்தபடி நிற்கிறேன் ! முன்னும் பின்னும் நத்தைகள் அணிவகுக்க... சிவப்புநிறக் கம்பளங்களில் அட்டைப்பூச்சியின் கோடுகள் ! குதித்து ஓடும் அணிலிடம் மூன்று கோடுகளைக் கடனாகக் கேட்கிறேன்! இன்றோ நாளையோ உதிரப்போகும் பழுப்புநிற இலைகளில் முகம் பார்க்கத் துடிக்கிறேன் ! ஆமையின் முதுகிலேறிய நத்தைகள் முயலுக்கு முன்னே ஓடுகின்றன... விக்கித்து நிற்கின்ற என்னோடு இரவின் கால்கள் பயணிக்கின்றன ! அதோ தெரிகிறது வற்றிப்போனக் குளத்தருகே நான் தவறவிட்ட.... நாட்களின் மணித்துளிகள் !

.........கா.ந.கல்யாணசுந்தரம்


No comments: