காயங்கள் வழியே
தினமும் பயணிப்பு
கைப்பேசிக்குள் மனம்புதைத்த
கலியுக மாந்தர் பலர் !
நாளிதழில் நுனிப்புல் மேய்ந்து
நாட்டு நடப்புகளில் சிலர் !
நேற்றைய நிகழ்வுகளை
நினைவில்கொண்டு....
அசையா பொம்மைகளாய் சிலர் !
விரல் விட்டு எண்ணிவிடலாம்....
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
பேசிக்கொண்டிருப்போரை !
மீண்டும் காயங்களே
நிர்ணயிக்கின்றன...
சரியத்தொடங்கும்
நாடகமேடையிலிருந்து
இறங்குவதற்கான
நடைமேடையை.... !
இது ஒரு தொடர் வண்டிப் பயணம்...!
.........கா.ந.கல்யாணசுந்தரம்
No comments:
Post a Comment