Tuesday, March 24, 2020
Wednesday, March 18, 2020
ஹைக்கூ சிந்தனைகள்
ஹைக்கூ சிந்தனைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
*********************************************
* பாசி படர்ந்த படிகள்
குளத்து நீரில் தவளை
வழுக்கி விழும் காட்சி
குளத்து நீரில் தவளை
வழுக்கி விழும் காட்சி
* தூரத்து மின்னல் கோடுகளில்
நன்றாகத் தெரிகிறது
ஒற்றைப் பனை மரம்
நன்றாகத் தெரிகிறது
ஒற்றைப் பனை மரம்
* பொய்க்கால் குதிரையாட்டம்
உயிர்பெற்று எழுகிறது
நாட்டுப்புறக் கலைகள்
உயிர்பெற்று எழுகிறது
நாட்டுப்புறக் கலைகள்
* கைகளை மட்டுமே
சுத்தம் செய்கிறது
கிருமி நாசினி
சுத்தம் செய்கிறது
கிருமி நாசினி
* அடுத்தக்கட்ட நகர்வில்
மாண்டுபோனாலும் மீள்கின்றன
சதுரங்கக் காய்கள்
மாண்டுபோனாலும் மீள்கின்றன
சதுரங்கக் காய்கள்
* ஊர்வலத்தின் முடிவு
தொடக்கமென அறிவிக்கிறது
உணர்வுகளின் குரல்
தொடக்கமென அறிவிக்கிறது
உணர்வுகளின் குரல்
............கா.ந.கல்யாணசுந்தரம்
Monday, March 16, 2020
அடர்வனத்து மேடையிலே அரங்கேறுகிறது !
மரங்களின் இடைவெளியில்
ஊஞ்சலாடும் கிளைகள்
காற்றடிக்கும் போதெல்லாம்
உரசிப்பார்த்து மகிழ்கின்றன
உதிரும் இலைகளில்
துளிர்த்தலின் முகவரிகள்
நலம் விசாரிக்கின்றன !
சூரியக் கதிர்களின்
ஊடுருவலில் உச்சம் தொட்ட
நிழல்கள்
வெளிச்ச மொழிகளுக்கு
மகுடம் சூட்டி
வனமெங்கும் ஓய்வெடுக்கும்
பறவைகளை வரவேற்கின்றன !
சலசலக்கும் சிற்றருவியில்
குளித்தபடி குருவிகளின்
குதூகலத்தில் பங்குபெறும்
மெல்லிய சாரலில்
இயற்கையின் வாசம்
தெம்மாங்கு பாடியபடி
தென்றலோடு இணைகிறது !
உயர்வு நவிற்சியில்லை
பிறிது மொழிதலில்லை
இயற்கையின்
செப்பலோசையுடன்
இன்னிசை வெண்பாவிங்கு
அடர்வனத்து மேடையிலே
அரங்கேறுகிறது !
……..கா.ந.கல்யாணசுந்தரம்
Subscribe to:
Posts (Atom)